avaram-plant-avarampoo

கூந்தல் வளர்ச்சி ஆவாரம் பூ

நம்ம கடை

Shop Here for Green Gifts

முடியுதிர்வு, இளநரை போன்ற பிரச்சனைகளுக்கு ஆவாரம் இலைகள், பூக்கள் சிறந்த தீர்வளிக்கிறது. ஆவாரம் இலைகளை அரைத்து தலைக்கு தேய்த்து குளித்துவர முடிஉதிர்வு தடுக்கப்படும். கூந்தல் கருகருவென்று அடர்த்தியாக வளரத்தொடங்கும். இதனைக்கொண்டு எண்ணெய் தயாரித்து பயன்படுத்தலாம். சீயக்காய் சேர்த்து கூந்தல் குளியல் பொடி தயாரித்தும் பயன்படுத்தலாம்.

avaram-plant-avarampoo

ஆவாரம் பூ 100 கிராம், வெந்தயம் 100 கிராம், பயத்தம்பருப்பு அரை கிலோ ஆகியவற்றை கலந்து மெஷினில் அரைத்துக் கொண்டு அதனை தேவையான அளவு எடுத்து வெந்நீரில் கரைத்து வாரம் இருமுறை தலைக்கு அலசி வர, கருகருவென கூந்தலை பெறலாம்.

வெயிலில் வெளியே செல்லும்போது ஆவாரம் இலையை தலையில் வைத்து கட்டி சென்றால் உஷ்ணம் தாக்காது. கொத்துக் கொத்தாக முடி கொட்டுவதை தடுக்கும் ஆவாரம் பூ.

ஆவாரம் பூ, செம்பருத்தி பூ, தேங்காய் பால் தலா ஒரு கப் எடுத்துக் கொண்டு, வாரம் ஒரு தடவை அரைத்துத் தலைக்குக் குளிக்க உடல் குளிர்ச்சியாகி, முடி உதிர்வு உடனடியாக நின்று கூந்தலும் நன்கு வளரத் தொடங்கும்.

ஒரு பிடி ஆவாரம் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி தலைக்கு குளிக்கும்போது கடைசியில் இந்த தண்ணீரில் ஒரு எலுமிச்சம்பழத்தை பிழிந்து விட்டு தலையில் ஊற்றி குளித்தால் முடி பளபளப்பாகும்.