பாதாம் பாயாசம்

நம்ம கடை

Shop Here for Green Gifts

பெரியவர்கள் குழந்தைகள் என அனைவரும் சிறந்த ஊட்டச்சத்து அளிக்கும் பாயாசம். இந்த பாதாம் பாயாசம் இருதயத்திற்கும், மூளைக்கும் வலுவை கொடுக்கக்கூடியது. சிறுநீரகக் கோளாறு போன்ற பிரச்சனைகளை தீர்க்கக் கூடியது.

வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான ஒரு பாயாசம். ஒவ்வொருநாளும் பாதாம் பருப்பை ஊறவைத்து ஏதோ ஒரு விதத்தில் எடுத்துக் கொள்வது உடலில் ஏற்படும் பலவிதமான பிரச்சனைகளை, நோய்களை தீர்க்கக் கூடியது. உடலின் கெட்ட கொழுப்பை நீக்கி நல்ல கொழுப்பை அதிகரிக்க கூடியது.

தேவையான பொருட்கள்

  • ஒரு கையளவு பாதாம் பருப்பு
  • ஒரு கையளவு வெள்ளரி விதை
  • ஒரு கப் தேங்காய்ப்பால்
  • ஒரு கப் கரும்பு சாறு
  • 2 ஏலக்காய்

  • 2 கிராம்பு
  • ஒரு சிட்டிகை ஜாதிக்காய் பொடி
  • சிறிது குங்குமப்பூ
  • 10 கிஸ்மிஸ்பழம்
  • 10 முந்திரிப் பருப்பு

செய்முறை

  • முதலில் பாதாம் பருப்பை நன்கு ஊறவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • முடிந்தால் ஒரு ஆறு மணி நேரம் ஊறவைத்து எடுத்துக் கொள்ளலாம் அல்லது சுடுதண்ணீரில் அரைமணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொண்டு தோலை நீக்கி அதனுடன் சிறிது தேங்காய்பால் சேர்த்து வெள்ளரி விதை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து நன்கு மைய விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

  • அரைத்தவற்றுடன் மீதமிருக்கும் தேங்காய்ப்பால், கரும்பு சாறு, ஜாதிக்காய் பொடி மற்றவற்றையும் சேர்த்து கலந்து விட்டு குங்குமப்பூ, கிஸ்மிஸ், முந்திரி ஆகியவற்றையும் கலந்துவிட்டால் சுவையான பாதாம் பாயாசம் தயார்.

1 thought on “பாதாம் பாயாசம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *