பனிவரகு கொத்தமல்லி புலாவ்

நம்ம கடை

Shop Here for Green Gifts

புரதச்சத்து நிறைந்த தானியம் பனிவரகு. இவ்வாறான உணவுகளை விதவிதமாக பனிவரகில் சமைத்து உண்பதால் அஜீரணம், வயிறு உப்புசம், உடல் பருமன் என பல நோய்கள் மறையும். சிறந்த நோயெதிர்ப்பு சக்தியை கொடுக்ககூடியது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உணக்கூடியது.

மேலும் பனிவரகின் நன்மைகள், பயன்கள் மற்றும் மருத்துவகுணங்கள் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும் – பனிவரகு

தேவையான பொருட்கள்

  • 1 கப் பனிவரகு அரிசி
  • ½ தேங்காய்
  • ½ சிறு கட்டுகள் கொத்தமல்லித் தழை
  • சிறிது  எண்ணெய்
  • 1 ஏலக்காய்
  • 2 கிராம்பு
  • 1 தேக்கரண்டி தனியா
  • 4 பற்கள் பூண்டு
  • 2 வெங்காயம்
  • 1 தேக்கரண்டி இஞ்சி விழுது
  • 2 பச்சை மிளகாய்
  • சிறிதளவு பட்டை
  • 1 தேக்கரண்டி கசகசா
  • தேவையான அளவு உப்பு
  • முந்திரி
Panivaragu-Millet-Proso-Millet in Tamil, Millet

செய்முறை

  • முதலில் பாதி தேங்காயைத் துருவி, அத்துடன் ஏலக்காய், கிராம்பு, பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், பட்டை, தனியா மற்றும் கசகசா சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
  • அத்துடன் ஒன்றரை கட்டு கொத்தமல்லித் தழையையும் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். 
  • மீதமிருக்கும் தேங்காயைத் துருவி 2 டம்ளர் அளவு தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும். 
  • வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். 
  • அத்துடன் அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்து நன்றாக வதக்கவும். 
  • பனிவரகு அரிசியை நன்றாக கழுவி 20 நிமிடம் ஊறவைக்கவும்
  • ஒரு மண் சட்டியில் பனிவரகு அரிசி அத்துடன் வதக்கியவற்றைச் சேர்த்து 2 டம்ளர் தேங்காய் பால் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து 1௦ நிமிடங்கள் சிறு தீயில் வேக வைக்கவும்.
  • நன்றாக வெந்த பின் அடுப்பை அணைத்து மூடிவைக்கவும்.
  • 10 – 15 நிமிடம் சென்று மண் சட்டியை திறந்து மீதமுள்ள கொத்தமல்லியைப் பொடியாக நறுக்கி வறுத்த முந்திரியையும் சேர்த்து நன்கு கிளறிவிடவும்.
  • சூடான பனிவரகு கொத்தமல்லி புலாவ் தயார். 

பனிவரகு கொத்தமல்லி புலாவ்

புரதச்சத்து நிறைந்த தானியம் பனிவரகு. இவ்வாறான உணவுகளை விதவிதமாக பனிவரகில் சமைத்து உண்பதால் அஜீரணம், வயிறு உப்புசம், உடல் பருமன் என பல நோய்கள் மறையும். சிறந்த நோயெதிர்ப்பு சக்தியை கொடுக்ககூடியது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உணக்கூடியது.
ஆயத்த நேரம் : – 30 minutes
சமைக்கும் நேரம் : – 20 minutes

தேவையான பொருட்கள்

  • 1 கப் பனிவரகு அரிசி
  • ½ தேங்காய்
  • ½ சிறு கட்டுகள் கொத்தமல்லித் தழை
  • சிறிது  எண்ணெய்
  • 1 ஏலக்காய்
  • 2 கிராம்பு
  • 1 தேக்கரண்டி தனியா
  • 4 பற்கள் பூண்டு
  • 2 வெங்காயம்
  • 1 தேக்கரண்டி இஞ்சி விழுது
  • 2 பச்சை மிளகாய்
  • சிறிதளவு பட்டை
  • 1 தேக்கரண்டி கசகசா
  • தேவையான அளவு உப்பு
  • முந்திரி

செய்முறை

  • முதலில் பாதி தேங்காயைத் துருவி, அத்துடன் ஏலக்காய், கிராம்பு, பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், பட்டை, தனியா மற்றும் கசகசா சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
  • அத்துடன் ஒன்றரை கட்டு கொத்தமல்லித் தழையையும் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். 
  • மீதமிருக்கும் தேங்காயைத் துருவி 2 டம்ளர் அளவு தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும். 
  • வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். 
  • அத்துடன் அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்து நன்றாக வதக்கவும். 
  • பனிவரகு அரிசியை நன்றாக கழுவி 20 நிமிடம் ஊறவைக்கவும்
  • ஒரு மண் சட்டியில் பனிவரகு அரிசி அத்துடன் வதக்கியவற்றைச் சேர்த்து 2 டம்ளர் தேங்காய் பால் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து 1௦ நிமிடங்கள் சிறு தீயில் வேக வைக்கவும்.
  • நன்றாக வெந்த பின் அடுப்பை அணைத்து மூடிவைக்கவும்.
  • 10 – 15 நிமிடம் சென்று மண் சட்டியை திறந்து மீதமுள்ள கொத்தமல்லியைப் பொடியாக நறுக்கி வறுத்த முந்திரியையும் சேர்த்து நன்கு கிளறிவிடவும்.
  • சூடான பனிவரகு கொத்தமல்லி புலாவ் தயார்.