நம்ம கடை
Shop Here for Green Gifts
- ‘பசித்துப் புசி’, பசி நன்றாக வந்த பின்னரே உணவை உண்ண வேண்டும். பசி இல்லையென்றால் உணவை உட்கொள்ள கூடாது, உண்டால் ருசிக்காது, பின்னர் பசிக்காது.
- உண்ணும் பொழுது தரையில் அமர்ந்து உணவை உட்கொள்ள வேண்டும்.

- உணவை கைகளால் எடுத்து உண்ண வேண்டும்.
- அவசரத்தில் உணவை உண்ணக்கூடாது.
- கோபத்தில் உண்ணக்கூடாது. உடலால் ஜீரணிக்க முடியாது.
- உடலுக்கு உகந்த உணவை மட்டுமே உண்ணவேண்டும். நவீன உணவு, மரபணு மாற்று உணவை தவிர்க்க வேண்டும்.
- கவலையிலும் துக்கத்திலும் உணவை உண்ணக் கூடாது.
- தூக்கம் இருக்கும் போது உணவை உண்ணக் கூடாது. உடலால் உணவு செரிமானம் ஆகாது. அதிக களைப்புடன் இருக்கும் பொழுதும் உண்ணக் கூடாது. அப்பொழுது தேவையானது சிறிது ஓய்வும், உறக்கமும் தான்.
- உண்டபின் மிகுந்த அவசர நிலை அல்லது பரபரப்பான சூழ்நிலை எனில் உண்ணக்கூடாது. உண்ட பின் சிறிது நிதானம் அமைதி தேவை.
- எந்த உணவை எதனுடன் சேர்க்க வேண்டும், எவையெல்லாம் பொருத்தமான உணவு, எதை முதலில் உண்பது, எதை அடுத்து உண்பது என உண்ணும் உணவிலும் சில பொதுவான விதிமுறைகள் உள்ளது. அவற்றை பின்பற்றுவது சிறந்த உடலாரோக்கியத்தை அளிக்கும். கீரைகளையும் அவ்வாறே காலத்திற்கேற்ப உண்ண வேண்டும்.

- ‘நொறுங்கத் தின்றால் நூறு வயது’, நன்றாக மென்று உமிழ்நீருடன் கலந்து ருசித்து, ருசியை அனுபவித்துக் உண்ண வேண்டும்.
- பழைய உணவுகளை சுட வைத்து உண்பது உடலுக்கு கேடு ஏற்படுத்தும்.
- பழைய உணவுகளை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து உண்பது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
- அதிக சூடான உணவையும் அதிகம் குளிர்ந்த உணவையும் தவிர்க்க வேண்டும்.
- சமைத்த உணவை இரண்டு மூன்று மணி நேரத்தில் உட்கொள்ள வேண்டும்.
- கெட்டுபோன உணவை உண்டால் உடல்நலம் பாதிக்கப்படும்.
- அதிக உணவு உள்ளதே என்பதற்காக உண்ணக்கூடாது.