நம்ம கடை
Shop Here for Green Gifts

மழைக்காலங்களில், குளிர்காலங்களில் உடலுக்கு தெம்பையும், நோய் எதிர்ப்பு சக்தியினையும் கொடுக்கக்கூடிய குழம்பு. எளிமையாக தயரிக்கக்கூடியது. சாதம், இட்லி, தோசை என அனைத்து உணவுடனும் சுவையாக இருக்கும் சத்தான இலை குழம்பு.
தேவையான பொருட்கள்
- ஒரு கையளவு கொத்தமல்லி
- ஒரு கையளவு மணத்தக்காளி கீரை
- ஒரு கையளவு கறிவேப்பிலை
- ஒரு கையளவு புதினா
- ஒரு கையளவு கற்பூரவல்லி இலை
- 1 வெங்காயம்
- 10 பல் பூண்டு
- 2 தக்காளி
- சிறிதளவு புளி
- 1 ஸ்பூன் துவரம்பருப்பு
- 1 ஸ்பூன் மிளகு
- 2 ஸ்பூன் சீரகம்
- 2 காய்ந்த மிளகாய்
- ¼ ஸ்பூன் பெருங்காயத்தூள்
- ½ ஸ்பூன் கடுகு
- ½ ஸ்பூன் வெந்தயம்
- 5 ஸ்பூன் நல்லெண்ணெய்
- உப்பு
செய்முறை
வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி துவரம்பருப்பு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வறுக்கவும்.
அத்துடன் கொத்தமல்லித்தழை,மணத்தக்காளி கீரை, கறிவேப்பிலை, புதினா, வெங்காயத்தாள் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
இவை அனைத்தும் ஆறியவுடன் புளி, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
அரைத்த விழுதில் தண்ணீரை (ஒன்று அல்லது ஒன்றரை டம்ளர்) கலக்கவும்.
வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம், வெந்தயம் தாளித்து, அரைத்த கலவையை அதில் ஊற்றி நன்றாக கொதிக்கவிட்டு, இறக்கிப் பரிமாறவும்.

இலை குழம்பு
மழைக்காலங்களில், குளிர்காலங்களில் உடலுக்கு தெம்பையும், நோய் எதிர்ப்பு சத்தையையும் கொடுக்கக்கூடிய குழம்பு. எளிமையாக தயரிக்கக்கூடியது. சாதம், இட்லி, தோசை என அனைத்து உணவுடனும் சுவையாக இருக்கும் சத்தான இலை குழம்பு.
பரிமாறும் அளவு : – 4
தேவையான பொருட்கள்
- ஒரு கையளவு கொத்தமல்லி
- ஒரு கையளவு மணத்தக்காளி கீரை
- ஒரு கையளவு கறிவேப்பிலை
- ஒரு கையளவு புதினா
- ஒரு கையளவு கற்பூரவல்லி இலை
- 1 வெங்காயம்
- 10 பல் பூண்டு
- 2 தக்காளி
- சிறிதளவு புளி
- 1 ஸ்பூன் துவரம்பருப்பு
- 1 ஸ்பூன் மிளகு
- 2 ஸ்பூன் சீரகம்
- 2 காய்ந்த மிளகாய்
- ¼ ஸ்பூன் பெருங்காயத்தூள்
- ½ ஸ்பூன் கடுகுஸ்பூன்
- ½ ஸ்பூன் வெந்தயம்
- 5 ஸ்பூன் நல்லெண்ணெய்
- உப்பு
செய்முறை
- வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி துவரம்பருப்பு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வறுக்கவும்.
- அத்துடன் கொத்தமல்லித்தழை,மணத்தக்காளி கீரை, கறிவேப்பிலை, புதினா, வெங்காயத்தாள் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
- இவை அனைத்தும் ஆறியவுடன் புளி, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
- அரைத்த விழுதில் தண்ணீரை (ஒன்று அல்லது ஒன்றரை டம்ளர்) கலக்கவும்.
- வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம், வெந்தயம் தாளித்து, அரைத்த கலவையை அதில் ஊற்றி நன்றாக கொதிக்கவிட்டு, இறக்கிப் பரிமாறவும்.