முளைக்கீரை – நம் கீரை அறிவோம்

தமிழகத்தில் எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூடிய ஒரு வகை கீரை இந்த முளைக்கீரை. சாதாரணமாக சந்தைகளில் இதனை பார்க்க முடியும். மிக எளிதாகவும் இந்த முளைகீரையை இயற்கை முறையில் விதைகளைக் கொண்டு விதைத்து வீட்டுத் தோட்டத்திலும் பயிரிட்டு பயன்படுத்தலாம்.

முளைக்கீரை மூளை வளர்ச்சிக்கு மிகவும் பயன்படக்கூடிய ஒரு கீரையாகும். குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும், உடலில் சக்தியையும் சீராக அளிக்கக் கூடிய சிறந்த கீரையாகவும் இது உள்ளது. உடலுக்கு சிறந்த ஆற்றலையும் அளிக்கக்கூடிய கீரை.

இந்த கீரையை எல்லா வயதினரும் உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்த பலனை கொடுக்கும். முளைகீரையில் வைட்டமின் ஏ சத்துக்கள் மிகுந்து இருப்பதுடன், வைட்டமின் பி1, பி2, சி ஆகிய சத்துக்களும் அதிகளவில் உள்ளது. மேலும் இரும்பு சத்தும் சுண்ணாம்பு சத்தும் இந்த முளைக்கீரையில் உள்ளது.

இதனை ஆவியில் வேகவைத்தோ அல்லது எண்ணெய், நெய்யில் வதக்கியோ சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட உடல் நலத்திற்கு சிறந்தது.

  • சரும நோய் உள்ளவர்கள் சொறி, சிரங்கு போன்ற சரும தொந்தரவுகளால் துன்புறுபவர்கள் இந்த முளைக் கீரையைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்ள நல்ல ஒரு பலனை பெற முடியும்.
  • முளைக்கீரையை அவ்வப்பொழுது பயன்படுத்துவதால் கண் ஒளி நன்றாக தெரியும்.
  • தலைமுடி நரைக்காமல் கருமையுடன் இளமையாகவும் இருக்கும்.
  • பலவீனமாக உள்ளவர்கள் சாப்பிட்டால் நல்ல பலன் பெரலாம்.
  • அஜீரணம், மலச்சிக்கல், குடல் புண் உள்ளவர்கள் இக்கீரையை தொடர்ந்து உண்ண அவை தீரும்.
  • நரம்புத்தளர்ச்சிக்கு சிறந்தது.

முளைக்கீரையில் இளங் கீரையைப் பயன்படுத்துவது அதிக சத்துக்களை அளிக்கும். தமிழகத்தில் இதனைக் கொண்டு கடையல், மசியல், பொரியல் என பல உணவுகளை செய்வதுண்டு. மண்சட்டியில் இதனை சமைத்து உண்பதால் இதிலிருக்கும் உயிர்சத்துக்களை சீராக பெறலாம். தலைவலி உள்ளபோதும் முளைக்கீரையை பயன்படுத்தக்கூடாது.

(1 vote)